Sunday, May 23, 2010

நீயற்றதொரு விபத்தாய்


அந்தரத்தில்
பாதை கோர்த்து
பயணித்திருந்த
சிலந்தியின்
கிளைகள்
உந்தி உயர்ந்து
கனவுகளை
ஆழக்கருமைகளாக்கி
தரை இறக்கியது
இலைகள்
இறகுகள்
இதயங்கள்
உறவுகளோடு
உணவு கண்ட
ஈக்களும் மொய்க்கும்
வனமெங்கும் இல்லை மரம்
ஒன்றுமற்ற பொழுதாகினும்
உறுத்துகிறது உன் வருகை.