![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2LHmeF3SVHS9GfGlI8aAACGIg3unIkgFSICrtIs3o2oIPce-Y-zjDXTA1BBKW9QG0I-aXx29BgC1VVOA2kFrHDp50K-avlaKc-wGeqTpWV0tmA0Xsqr43iXeppQ6v1FCywfeGgdQ8e4A/s320/sssssssss.jpg)
பெருதற்கரிய வார்த்தைகளை
வார்த்திருந்த உனது
நாவு தடித்திருக்கிறது
சொற்களினிடையே
விடுபட்ட எழுத்துக்கள்
வேறு வார்த்தைக்குள்
அடைபட்டுச்சொல்லி
முடித்ததின்
பொருளுக்கு அயலாகி
அர்த்தமற்றுப்போன கவிதை
நிலம் பூந்தாது
வெளிமிதக்கும் நிழல் போல
இருள் புலர காத்திருக்கும்.
ஒவ்வொரு கண்களுக்காயும்.