Monday, September 20, 2010

சஞ்சாரம்

பிரக்ஞைகளை கூடுகட்டி
பெருத்திருந்த
வயிற்றின் தாரைகள்
குறுக்கும் நெடுக்கும்
பலதுமாய்
சுருங்கிக்கிடக்கிறது
மௌனத்தின் மெய்கள்
பதப்படுத்திய
உராய்வுகளின் வெளிச்சம்
பலமாய் பலவீனமாய்
பிறந்து கொண்டிருக்கின்றது
அறை முழுவதும்
அடக்கவியலாத
ஆளுமைகளைக் கொண்டே
ஒவ்வொரு முறையும்
கருத்தரித்து விடுகிறேன்
இம்முறையும்

3 comments:

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்குங்க..

புபேஷ் said...

vaalthukkal..nalla iruckku.

Anonymous said...

?? :-)