Tuesday, September 11, 2012

துயிலுற்ற மௌனம்





துழாவிக்களைத்த  நீர் அலைகள்
அமைதியிழந்து  தழைக்கிறது
அத்துமீறி என்  தோட்டத்து வேரில்
இழைய தொடரும் காலமெனினும்
துரதிர்ஷ்ட சொல்லொன்றுக்கு கீழ்
முளைத்து நெளிந்த  பாம்பின் கால்கள்..
அனுமதிக்கப்பட்ட பரமபதத்தை 

வழிமறித்து. தனித்து நிற்கிறது
சுருக்கமற்ற நமது பிரியங்கள்
யாருமற்றதாய் புலம்பும் இன்மைகள்
பேரளவானதொரு தூரத்தை 

நெருங்குகிறது
அண்மையில்   இருப்பதறியாது









2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேரளவானதொரு தூரத்தை
நெருங்குகிறது
அண்மையில் இருப்பதறியாது//

நல்லா இருக்கு யாழினி..

ആറങ്ങോട്ടുകര മുഹമ്മദ്‌ said...

മലയാളം മാത്രമെ അറിയുകയുള്ളൂ.ബ്ലോഗില്‍ വന്ന്‌ വിലയേറിയ അഭിപ്രായം പങ്കുവച്ചതിന് നന്ദി.വീണ്ടും വരുമല്ലോ.