Friday, March 26, 2010

பெயர்க்கவற்ற அகண்டவெளி

துயர்க்கூடி
முதிர்ந்திருந்த
இரவின் வேர்த்தேடி
பயணித்திருந்த இலைகள்;
துழாவி தூர்க்கவியலாது
நிலமெங்கும் வியாபித்திருந்த
நரம்புகளைக்கொண்டு
சிவப்பாலும்
பச்சையாலும்
சுயாதீனமாய்
உயிர்க்கவற்ற விளக்குகளில்
சுருண்டுடையவிருக்கும்
ஒளிக்கு வண்ணமீட்டுகிறது.
வேறொருவருக்கும் உதவாத
வெற்று வெளிச்சங்களின்
அசூயைக்கொண்டு
கருகிய இலைகள்
வெகுநேரம் கூவியும்
வெளிவராத
வீட்டுடைமைகளை
சலித்த யாசகனாய்
வஞ்சனைகளின் பிரதிபலிப்புகளில்
தன்னை இறுக்கி
இலை சேர்த்துக்கொண்டிருக்கின்றது
மரம்.

10 comments:

சென்ஷி said...

//தன்னை இறுக்கி இலை சேர்த்துக்கொண்டிருக்கின்றது மரம்.//

அருமையான கவிதை யாழினி.. ரொம்பப் பிடிச்சிருக்கு.

Anonymous said...

my tamil is not good enough to understand this :-(

Karthick Chidambaram said...

முதல் சில வரிகளிலேயே நீங்கள் அசத்தி விட்டீர்கள்.

கார்த்திக்.
புதிய தொடர் என் வலை பூவில். படியுங்கள். கருத்தை பகிருங்கள்.
http://eluthuvathukarthick.wordpress.com/

க.பாலாசி said...

மீண்டுமொரு நல்ல கவிதை...

நேசமித்ரன். said...

//தன்னை இறுக்கி இலை சேர்த்துக்கொண்டிருக்கின்றது மரம்.//

அருமையான கவிதை யாழினி.. ரொம்பப் பிடிச்சிருக்கு.

//

அதே!!!

"உழவன்" "Uzhavan" said...

கவிதை அருமை

ஆயில்யன் said...

//my tamil is not good enough to understand this :-(//

இக்கவிதை புரிகின்ற அளவிற்கு எனது தமிழ் கல்வி இல்லை என்பதன் ஆங்கில வடிவமாக்கி புனிதாக்கா சொல்லியிருக்காங்க! - அதைத்தான் நானும் சொல்றேன்! :)

யாத்ரா said...

இப்ப தான் படிச்சேன், நல்லா இருக்கு யாழினி, ரொம்ப ஆழமான மொழி.

shakthikumar said...

யாழினி தோட்டத்தில் பசுமைக்கு பஞ்சமில்லை வாழ்த்துக்கள் :)

நிஜமா நல்லவன் said...

ஆயில்யன் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்:)