Tuesday, December 8, 2009

பெரிதொரு மழைக்காதல்

வெகுநீண்டகாலமாய்
கண்கள் முட்டுவதும்
காதல் பேசுவதும்
கருத்துக்கள் மோதுவதும்
பெரும் சத்தங்களோடு
கலைந்து போவதுமாய்
இந்த மேகங்கள்

நிலம் நனைத்த
துளிகளுக்குள்
என் விழிநீர் சிலதுமிருக்கும்
அவைகளில் கொஞ்சம்
விளை நிலமொன்றுக்குள்
விழுந்திருக்கலாம்

இரு நெல்மணிக்கதிர்களாகவோ
பாகையாகவோ
அல்லது பழங்களாகவோ
பதமில்லாது முளைத்திருக்கலாம்

உணர்வுச்செத்த தருணமொன்றில்
உன் புணர்வு ஒருபோதும்
நேசத்தை சொல்லியிருக்கவேயில்லை
மற்றுமொரு மழை
வரக்காத்திருகிறேன்

மெல்ல
விரல்கள் நீண்டு
நீர்க்கோடுகளாய்
எலும்புகள் உடைந்து
ரத்தம் நிறமாறி
வியர்வை துவாரங்களில்
கசிகிறது நீரென

அடைக்கப்படாத
நீர்ப்பையென தளர்ந்து
தரையெங்கும் விரிந்து
பலமாய் பெய்தோய்கிறேன் பெருமொரு மழையாய்.

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தோட்டத்தில் நல்ல மழையும் பல மகிழ்ச்சி கவிதைகள் பூக்கவும் வாழ்த்துகிறேன்.

வால்பையன் said...

உனக்குள்ள இவ்வளவு திறமைகளை ஒழிச்சி வச்சிகிட்டா இவ்ளோ நாள் சும்மா இருந்த!?

ப்ரியன் said...

ரொம்ப நல்லா இருக்கு நீ இவ்ளோ நல்லா எழுதுவியா?! சொல்லவே இல்லே...அதுக்கு தேவை தொடர்ந்து எழுதுறதுதான் சிறந்த பயிற்சி...தொடர்ந்து எழுது..வாழ்த்துக்கள்...

பூங்குன்றன்.வே said...

//நிலம் நனைத்த
துளிகளுக்குள்
என் விழிநீர் சிலதுமிருக்கும்//

/அடைக்கப்படாத
நீர்ப்பையென தளர்ந்து
தரையெங்கும் விரிந்து
பலமாய் பெய்தோய்கிறேன் பெருமொரு மழையாய். //

அசத்தல் வரிகள்..வாழ்த்துக்கள் யாழினி !!!

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது..

S.A. நவாஸுதீன் said...

எங்கே இருந்தீங்க இவ்ளோ நாளா?.

யாழினி said...

முத்துக்கா உங்க வாழ்த்துதான்
முதல் வாழ்த்து சந்தோஷமா இருக்குக்கா..

யாழினி said...

நன்றி அருண்

யாழினி said...

விக்கி...
நிஜமாவா சொல்றிங்க....
நன்றி உங்க வாழ்த்துக்கு

யாழினி said...

நன்றி பூங்குன்றன்

யாழினி said...

நன்றி முனைவர். இரா.குணசீலன் அவர்களே

யாழினி said...

நன்றி S.A. நவாஸுதீன் உங்க வாழ்த்துக்கு...

டவுசர் பாண்டி... said...

வாவ்.....இதான் பெஸ்ட்....வாழ்த்துகள்....

யாத்ரா said...

//நிலம் நனைத்த
துளிகளுக்குள்
என் விழிநீர் சிலதுமிருக்கும்
அவைகளில் கொஞ்சம்
விளை நிலமொன்றுக்குள்
விழுந்திருக்கலாம்

இரு நெல்மணிக்கதிர்களாகவோ
பாகையாகவோ
அல்லது பழங்களாகவோ
பதமில்லாது முளைத்திருக்கலாம்//

அருமை அருமை

இவ்ளோ நல்லா எழுதறீங்க, ஏன் இவ்ளோ நாள் எழுதாம இருந்தீங்க