Sunday, January 3, 2010

கிரகப்பிரவேசம்

புழு தின்ற இலையில்
விடுபட்ட பாகம்
சிறகாகி வட்டமிடும்
வெளியெங்கும்
ஊருக்கு ஒதுக்குபுறம்
கடத்தப்பட்ட
காலம் கடந்துபோன வீடு
எச்சத்தில்
விழுந்த தானியம்
உலைக்குள் உருகி
பிழைத்தது பசியற்ற
வற்றுகளாய்
பொய்த்திருக்கும் புதர்களுக்குள்
விபச்சாரிகளின்
அழுகையில்லாத மௌனம்
மறுபடியும் விதைக்கப்படுகின்றது

குதிருக்குள்
ஊர் செய்ய...

4 comments:

Muruganandan M.K. said...

"புழு தின்ற இலையில்
விடுபட்ட பாகம்
சிறகாகி வட்டமிடும்.."

மிக அழகான சொற்களைத் தேர்ந்து கோத்திருக்கிறீர்கள்.

Ganesh Gopalasubramanian said...

அருமையான கவிதை!

”எச்சத்தில் விழுந்த தானியம்”
பறவைக்குத் தெரியவில்லையோ?

“பிழைத்தது பசியற்ற வற்றுகளாய்”
இலையில் பெரும்பகுதி சோக இழை!!

கிரகப்பிரவேசம் - அருமையான தலைப்பு.

S.A. நவாஸுதீன் said...

////எச்சத்தில்
விழுந்த தானியம்
உலைக்குள் உருகி
பிழைத்தது பசியற்ற
வற்றுகளாய்
பொய்த்திருக்கும் புதர்களுக்குள்
விபச்சாரிகளின்
அழுகையில்லாத மௌனம்
மறுபடியும் விதைக்கப்படுகின்றது
குதிருக்குள்
ஊர் செய்ய...////

என்ன வரிகள், வாவ். அருமைன்னு ஒத்த வார்த்தையில் சொல்லிட்டு போக முடியலை.

பாலா said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு தொடர்ந்து
எழுதுங்கள்