Monday, September 17, 2012

தொலைவு




ஏதுமற்ற சமரசங்களில்
தொலையாத நிராசைகள்
ரகசியமாய் பதுங்கியது
சுவாசத்தினூடாய்
விலகும்  வழியற்று
சமநிலைகள்
தள்ளி சென்ற 
நீர்க்குமிழிகள்
உடையாது ஒன்றை ஒன்று  புணர்ந்து
கொண்டு  காற்றை
சிதறடித்த  .
சந்தர்ப்பங்களை
மறந்திருந்த  புன்னகைகள்
துயரங்களின் தழும்புகளால்
கீறப்பட்டப்பட்ட பற்களில்
மெல்ல தன்னை குறுக்கி
தேம்பிகொள்கிறது.
விட்டகலாத ஒற்றை முத்தம்கூட
காலத்தை  கடத்தி செல்லும் முள்ளாகும் 





2 comments:

Saritha said...

*விட்டகலாத ஒற்றை முத்தம்கூட காலத்தை கடத்தி செல்லும் முள்ளாகும்*

இந்த முட்கள் ஏனோ மனதை கீறி ரணமாக்குகிறது :’(

அகநாழிகை said...

அருமை.