வீதி வீதியாய்
அலைக்கழிகின்ற
தீரவியலா துன்பத்தின்
நெரிசலில்
சிக்குண்டு விடுபட்ட
மாமிசச்சிலையின் பசி
சில பருக்கைகளில்
தீர்ந்திருக்கும்
தன் வசமிழந்து
பொழிகின்ற மழையின்
தீண்டலில்
உதறி எழுகின்ற
விளைச்சலென
விண்ணையும்
முட்டும்
சோக விருஷ்டம்
அதன் உக்கிரத்தை
தூவி இருந்தது
முகம் சுளித்து
பற்றில்லாமல்
பயந்து நகர்கின்ற
பருவ பெண்களையோ
கடை முன் கையேந்தும்
பசியையும்
மதுரங்களில் படபடக்கும்
ஈயையோ
ஒரு சேர விரட்டும்
கைகளுக்கோ
மீந்த உணவு
சிறு பாலிதீன்
பைகளில் திணித்து
தருகின்ற
இரக்க மனதுகளுக்கோ
அவள் இளைத்திருக்கவே இல்லை
வழியெங்கும்
விரிந்து கிடக்கிறது
அவளுக்கான பிரயாணம்..
9 comments:
நல்லா இருக்குங்க... வாழ்த்துகள்.
நல்ல வெளிப்பாடு
நல்லா இருக்கு யாழினி கடைசி வரிகள் மிகவும் பிடித்தது.
"விண்ணையும்
முட்டும்
சோக விருஷ்டம்
அதன் உக்கிரத்தை
தூவி இருந்தது"
மனத்தைத் தொடுகிறது.
//இரக்க மனதுகளுக்கோ
அவள் இளைத்திருக்கவே இல்லை
வழியெங்கும்
விரிந்து கிடக்கிறது
அவளுக்கான பிரயாணம்..//
நல்லா இருக்குங்க...
முதல் முறை உங்கள் பதிவை படிக்கிறேன்
பதிவின் கருபொருளை மனதில் பதிய வைத்துவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லா இருக்கு.
/////பொழிகின்ற மழையின்
தீண்டலில்
உதறி எழுகின்ற
விளைச்சலென
விண்ணையும்
முட்டும்
சோக விருஷ்டம்/////
நல்லா வந்திருக்கு
வலிகள் வரிகளில்
பசியையும்
மதுரங்களில் படபடக்கும்
ஈயையோ
ஒரு சேர விரட்டும்
கைகளுக்கோ
மீந்த உணவு
சிறு பாலிதீன்
பைகளில் திணித்து
தருகின்ற
இரக்க மனதுகளுக்கோ//
andru thaniyum nam adimayin mogam..? baarathi kettathu ithayum thaan pola...
Post a Comment