Wednesday, August 10, 2011

இருட்டு முத்தம்




சாமங்களில் அவ்வப்போது
எனது அறையில்
உலவத் தொடங்கியிருக்கின்றது

ஒரு அணிலின் சத்தம்
அதற்கு நீளம் குறைந்திருக்கின்றது
உதடுகளை தின்றபடியே
ஏதேதோ பிதற்றியது
அசதியில் தூங்கி விட்டேன்
அல்லது மயக்கத்திலுமாகலாம்
விடியல் பொழுதில்
படுக்கையெங்கும் கோடுகள்
நிசப்தமாய் பூத்திருந்தது
நீ தந்துவிட்டுப்போன
முற்றத்து மல்லிகை

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நிசப்தமாய் பூத்திருந்தது
நீ தந்துவிட்டுப்போன
முற்றத்து மல்லிகை //

நல்லா இருக்கு யாழினி..

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க , அந்த கடைசி மூணு வரி

நிசப்தமாய் பூத்திருந்தது
நீ தந்துவிட்டுப்போன
முற்றத்து மல்லிகை //

இல்லாமலும்

ரோகிணிசிவா said...

ம்ம்ம்ம் # மல்லிகை வாசம் வீசட்டும்

KParthasarathi said...

சரியாக புரியவில்லை.இருப்பினும் படிக்க மிகவும் நன்றாக உள்ளது